×

பாஜ அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பாளர்கள்: யுடி காதர் நம்பிக்கை

மங்களூரு: கிராம பஞ்சாயத்து தேர்தலில் வாக்காளர்கள் பா.ஜ.வுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று முன்னாள் அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார். மங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது: பா.ஜ. அரசு அதிகாரத்துக்கு வந்த பின் மக்களுக்கு ரேசன் அட்டை கிடைக்கவில்லை. வீடுகள் வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. ஆயுஷ்மான் பாரத் கார்டு யாருக்கும் கிடைக்கவில்லை. உதவி தொகை பணம் கிடைக்காமல் உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்து அவர்களை தெருவில் நிற்கவைத்துள்ளனர். இது போன்ற ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

அதே போல் காங்கிரஸ் ஆட்சியில் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நடைமுறைக்கு கொண்டு வந்த போது பா.ஜ.வினர் அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ. அரசு அமைந்துள்ளது அப்படியிருந்தும் கஸ்தூரிரங்கன் அறிக்கையை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இதனால் மக்களுக்கு ஆதரவாக இல்லாத அரசுக்கு கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் சரியான பாடம் கற்று கொடுக்க வேண்டும். இத்துடன் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜ. அரசு அமைந்த பின் கிராம பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் எப்படி பா.ஜ.வுக்கு வாக்காளிப்பார்கள் என்றார். 


Tags : BJP ,Voters , People's Voters Against BJP Government: UT Khader Hope
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...